Price: ₹300.00
(as of Feb 27, 2025 17:18:48 UTC – Details)
உயிர் கொல்லி மருந்தடா நீ….தன் கடந்த காலத்தை மறைத்து தன் ஆண்மையை நிரூபிக்க நாயகியை திருமணம் செய்யும் நாயகன். அவளை குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாக மட்டுமே பார்ப்பவன்.சராசரி ஆசைகளுடன் திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் நாயகி. அவள் ஆசைகள் அனைத்தும் பொய்த்து போகிறது. நாயகனின் கடந்த காலம் அறிவாளா?
நாயகன் மனம் மாறி அவள் மேல் காதல் கொள்வானா?.திருமணம் நடை பெறுவதற்கான எந்த அடையாளமும் இல்லை அந்த வீட்டில். ஓர் குடிசை வீட்டு வாசலில் நடைபெறும் திருமணம். அங்கு கூடி இருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் மொத்தமே பதினைந்து நபர்கள் தான் இருப்பார்கள்.தாலி கட்ட வேண்டியவனோ சாதாரண சட்டை, பேண்டில் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் திருமணம் குறித்த சந்தோஷம் இல்லை அதற்க்கு மாறாக எரிச்சல் முட்டி நின்றது.ஆறடி ஆண் மகன் மீசை இல்லாத தமிழ் மகன். படித்தவன் என்பது அவன் உடை நாகரீகத்தில் தெரிந்தது.