Price: ₹150.00
(as of Jun 15, 2025 08:53:58 UTC – Details)
கதையின் நாயகன் யாழ்வேந்தன், நாயகி உமையாள்…
யாழ்வேந்தனுக்கும் அகல்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்க, திருமண நாள் அன்று யாழ்வேந்தனின் தம்பியை காதலித்த அகல்யா திருமணத்தினை நிறுத்துகின்றாள்…
யாழ்வேந்தனும் தனது தன்மானத்தை காப்பாற்றும் பொருட்டு அகல்யாவின் தங்கை உமையாளை திருமணம் செய்து கொள்கின்றான்…
மீதி கதையில்…
கதையில் இருந்து ஒரு டீசர்
வெற்றிவேலும், “வேந்தன் ரூமுக்குள்ள வா” என்று சொல்ல, ஹரிக்கோ கைகால்கள் வெடவெடத்து போனது…
அவன் ஒன்றுமே பேசவில்லை…நாடியை நீவிக் கொண்டே மௌனமாக அனைவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான்…
உணர்ச்சி துடைக்கப்பட்ட பார்வை… தனசேகரனுக்கோ தலையில் இடி விழுந்த உணர்வு…
“என்னம்மா பண்ணி வச்சு இருக்க?” என்று தழுதழுத்த குரலில் அகல்யாவிடம் கேட்க, அவளோ, “எனக்கு ஹரியை தான்பா பிடிச்சு இருக்கு” என்றாள் உறுதியான குரலில்…
உமையாளோ, “இவங்க எப்படி இவ்ளோ தைரியமா பேசுறாங்க?” என்று நினைத்துக் கொண்டாள்.
அவளுக்கு யாழ்வேந்தனின் உயரத்தை பார்த்தாலே பயம்… அவன் முன்னே அகல்யா பேசுவது உமையாளுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.
சற்று நேரத்தில் ஹரிகிரிஷ்ணாவும் தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தவன் பயந்து பயந்து யாழ்வேந்தனை நோக்கி வர, அவனை பார்த்துக் கொண்டே எழுந்த யாழ்வேந்தனோ, அவனை கண்களால் அருகே வரும்படி அழைத்தான், அவன் அருகே வந்து அடுத்த கணம், அந்த அறையே அதிர்ந்தது…
ஆம் ஓங்கி அறைந்து இருந்தான் ஹரிகிருஷ்ணாவுக்கு…
அகல்யாவோ தலையை தாழ்த்தி கண்களை மூடிக் கொள்ள, உமையாளும் இறுக கண்களை மூடிக் கொண்டாள்.
பாக்கியாவும் தனசேகரனும் வாயில் கையை வைக்க, கன்னத்தில் கையை வைத்துக் கொண்டே யாழ்வேந்தனை அதிர்ந்து பார்த்தான் ஹரிகிருஷ்ணா…
யாழ்வேந்தன் எதுவும் பேசவில்லை, ஒற்றை விரலை நீட்டியவன், “எதுக்கு அறைஞ்சேன்னு உனக்கு நல்லாவே தெரியும்” என்று சொல்லி விட்டு தனசேகரனை பார்த்தவன், “உங்களுக்கு எண்பது லட்சம் பணம் கொடுத்து இருக்கேன்…” என்று சொல்ல, “மாப்பிளையை அழைச்சுட்டு வாங்க” என்ற சத்தம் மணமேடையில் இருந்து கேட்டது…
அடுத்த கணமே கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டே தலையை கோதியவனை ஹரிகிருஷ்ணா அதிர்ந்து பார்க்க, அவனோ, தனசேகரன் அருகே வந்து, “இப்போ மணமேடைல நான் போய் இருக்க போறேன்… மணமேடை வரை வந்து பொண்ணு பிடிக்காம கல்யாணத்தை நிறுத்திடுச்சுன்னு இருக்க கூடாது… கல்யாணத்தை நிக்கிறதா இருந்தா கூட அது நான் நிறுத்துனதா தான் இருக்கணும்… என் கல்யாணம் இன்னைக்கு நடந்தே ஆகணும்” என்றான்.
அந்த வசனத்தில், திமிர், ஆணவம், தெனாவட்டு, கோபம், அழுத்தம் என்று அனைத்தும் சேர்ந்து தான் இருந்தது.
ஹரிகிருஷ்ணாவோ, “வேந்தா” என்று அழைக்க, “உன்னை நினைச்சுட்டு அவன் என் கூட படுத்தா எனக்கு தாண்டா அசிங்கம்” என்று அவனை பார்க்காமல் கொச்சையாக திட்டியவன் விழிகள் பாக்கியாவுக்கு பின்னே நின்ற உமையாளில் படிந்தது.
அவளோ தன்னை பாக்கியாவுக்கு பின்னால் மறைத்துக் கொள்ள முயல அவளை நோக்கி சொடக்கிட்டவன், “ஏய் நீ யாரையும் லவ் பண்ணுறியா?” என்று கேட்டான் அதட்டலாக.
அவளோ அவசரமாக இல்லை என்று தலையாட்டினாள்…
“மேஜரா?” என்று அடுத்த கேள்வியை கேட்க, அவளுக்கோ பயத்தில் சட்டென்று கண்கள் கலங்கி போக, விடை சொல்ல முடியாமல் தவிக்க, அவளுக்கு பதிலாக “போன மாசம் தான் பிறந்தநாள் முடிஞ்சுது” என்றார் பாக்கியா…
அவனோ அடுத்த கணமே தனசேகரனிடம், “அவ ரெடியாகி மேடைக்கு வரணும்” என்று கட்டளையாக சொல்லி விட்டு வாசல் வரை சென்றவன் ஒரு கணம் திரும்பி, “இல்லன்னா எண்பது லட்சம் இப்போவே என் கைக்கு வரணும்” என்று மிரட்டலாக உரைத்து விட்டு மணமேடையை நோக்கி சென்றவனுக்கு அவள் பெயர் கூட தெரியாது என்பது தான் நிதர்சனம்…
ASIN : B0B5G8NLTR
Language : Tamil
File size : 1.3 MB
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 414 pages
Customers say
Customers enjoy the Tamil book’s story, with one mentioning its beautiful theme. They praise the character development.